செய்திகள்

கோயம்பேட்டில் வழிப்பறி கும்பல் கைது

Published On 2019-04-07 12:00 GMT   |   Update On 2019-04-07 12:00 GMT
கோயம்பேட்டில் வழிப்பறி கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

கோயம்பேடு நூறடி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் கத்தி, செல்போன்கள் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் கோயம் பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி, செல்போன் பறிப்பு மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததையும் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஆதம், நெற்குன்றத்தைச் சேர்ந்த விக்னேஷ், பிரவீன் ராஜேஷ், பாலாஜி, மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த செல்வா மற்றும் 18வயது சிறுவன் ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிள்கள், கத்தி, 12 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News