செய்திகள்

கீழ்வேளூர் அருகே பறக்கும்படை சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

Published On 2019-03-29 15:43 IST   |   Update On 2019-03-29 15:43:00 IST
கீழ்வேளூர் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSpolls

நாகப்பட்டினம்:

நாகை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருக்குவளை தாசில்தார் இளங்கோவன் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் நாகை கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகையில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்ற ஒரு வேனை மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது பூம்புகார் மீனவர் காலனியை சேர்ந்த செல்லத்துரை என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லட்சம் ரொக்கம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி கீழ்வேளூர் தாசில்தார் கபிலனிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News