செய்திகள்

மாமல்லபுரம் அருகே திருமணமாகி ஒரு வருடத்தில் மனைவி விவாகரத்து கேட்டதால் கணவர் தற்கொலை

Published On 2019-03-26 06:23 GMT   |   Update On 2019-03-26 06:23 GMT
மாமல்லபுரம் அருகே திருமணமாகி ஒரு வருடத்தில் மனைவி விவாகரத்து கேட்டதால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தை அடுத்த வடகடம்பாடியை சேர்ந்தவர் முருகன் (வயது 36). சிற்பதொழில் செய்து வந்தார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கோபம் அடைந்த தீபா கடந்த மாதம் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் முருகன் மனவேதனையில் இருந்தார். இதற்கிடையே விவாகரத்து கேட்டு தீபா வக்கீல் நோட்டீசும் அனுப்பியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த முருகன் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News