செய்திகள்

தேனி அருகே கடைக்கு சென்ற மாணவி மாயம்

Published On 2019-03-23 14:16 GMT   |   Update On 2019-03-23 14:16 GMT
தேனி அருகே கடைக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

தேனி:

தேனி அருகே தேவாரம் அய்யப்பன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் குட்டிராஜ் மகள் காவ்யா (வயது 18). தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து தற்போது தேர்வு எழுதி முடித்துள்ளார். சம்பவத்தன்று காவ்யா கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் காவ்யா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தேவாரம் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் டி.மூணாண்டி பட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News