செய்திகள்

தவளக்குப்பம் அருகே லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-03-22 13:17 GMT   |   Update On 2019-03-22 13:17 GMT
தவளக்குப்பம் அருகே நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:

தவளக்குப்பம் அருகே தானம்பாளையம் குபேரன் வீதியை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 54). லாரி டிரைவர். இவருக்கு மனைவி  மற்றும் 2 மகன்கள் உள்ளனர். 

இதற்கிடையே தங்கவேலு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் டிரைவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் நோய் கொடுமையால் தினமும் அவதி அடைந்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று தங்கவேலுவுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தங்கவேலு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தங்கவேலுவின் மகன் தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News