செய்திகள்
வேதாரண்யம் அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை
வேதாரண்யம் அருகே பெற்றோர் கண்டித்ததால் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த பன்னாள் நடுகாட்டு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் மகன் அழகியமாறன் (வயது 19). இவர் 9-ம் வகுப்பு படித்துவிட்டு சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். இந்த நிலையில் அழகிய மாறன் ஆட்டோ சவாரிக்கு செல்லாததால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதில் மனமுடைந்த அழகியமாறன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுபற்றி வாய்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
வேதாரண்யத்தை அடுத்த பன்னாள் நடுகாட்டு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் மகன் அழகியமாறன் (வயது 19). இவர் 9-ம் வகுப்பு படித்துவிட்டு சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். இந்த நிலையில் அழகிய மாறன் ஆட்டோ சவாரிக்கு செல்லாததால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதில் மனமுடைந்த அழகியமாறன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுபற்றி வாய்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.