செய்திகள்
அண்ணாநகரில் கார் டிரைவரை தாக்கி கொள்ளை
சென்னை அண்ணாநகரில் கார் டிரைவரை தாக்கி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர்:
சென்னை அண்ணாநகர் நடுவங்கரையைச் சேர்ந்தவர் பிரபு. கால்டாக்சி டிரைவர். இவர் நேற்று இரவு காரை அண்ணாநகரில் நிறுத்தி விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முகமூடி கும்பல் அவரை தாக்கி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்கள். பின்னர் அவரிடமிருந்த ரூ.6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
அண்ணாநகர் நடுவங்கரை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் 2 வாலிபர்கள் நேற்று ஓட்டலில் வேலை பார்த்து விட்டு நடந்து சென்றனர். அப்போது முகமூடி கும்பல் அவர்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை பறித்து சென்றனர்.
இதுதொடர்பாக அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகர் நடுவங்கரையைச் சேர்ந்தவர் பிரபு. கால்டாக்சி டிரைவர். இவர் நேற்று இரவு காரை அண்ணாநகரில் நிறுத்தி விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முகமூடி கும்பல் அவரை தாக்கி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்கள். பின்னர் அவரிடமிருந்த ரூ.6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
அண்ணாநகர் நடுவங்கரை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் 2 வாலிபர்கள் நேற்று ஓட்டலில் வேலை பார்த்து விட்டு நடந்து சென்றனர். அப்போது முகமூடி கும்பல் அவர்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை பறித்து சென்றனர்.
இதுதொடர்பாக அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.