செய்திகள்
காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை முயற்சி
புதுவையில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது24). அவ்வப்போது கடலுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்லும் இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பகுதிநேர ஊழியராக வேலைசெய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் தொடக்கத்தில் சிலம்பரசனுடன் பேசி பழகி வந்தார்.
நாளடைவில் இந்த விவரம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அந்த பெண்ணை கண்டித்தனர். இதனால் அந்த பெண் சிலம்பரசனுடன் பழகுவதை நிறுத்தி கொண்டார். சிலம்பரசன் வலிய வந்து பேசினாலும் அந்த பெண் பேச மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சிலம்பரசன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று மதியம் இவர் ஆம்பூர் சாலை- நீடராஜப்பையர் வீதி சந்திப்பில் நின்று கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொண்டார். இதில் ரத்தம் பீறிட்டு மயங்கி விழுந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பெரியக்கடை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
புதுவை வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது24). அவ்வப்போது கடலுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்லும் இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பகுதிநேர ஊழியராக வேலைசெய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் தொடக்கத்தில் சிலம்பரசனுடன் பேசி பழகி வந்தார்.
நாளடைவில் இந்த விவரம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அந்த பெண்ணை கண்டித்தனர். இதனால் அந்த பெண் சிலம்பரசனுடன் பழகுவதை நிறுத்தி கொண்டார். சிலம்பரசன் வலிய வந்து பேசினாலும் அந்த பெண் பேச மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சிலம்பரசன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று மதியம் இவர் ஆம்பூர் சாலை- நீடராஜப்பையர் வீதி சந்திப்பில் நின்று கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொண்டார். இதில் ரத்தம் பீறிட்டு மயங்கி விழுந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பெரியக்கடை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews