செய்திகள்

சாத்தான்குளம் அருகே விவசாயி தற்கொலை

Published On 2019-03-18 13:52 GMT   |   Update On 2019-03-18 13:52 GMT
சாத்தான்குளம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு சடையன்கிணறு பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல் (வயது 60) விவசாயி. இவரது மனைவி மரிய பாக்கியம். சித்திரைவேலுக்கு குடி பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதில் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் மனமுடைந்த அவர் கடந்த 15-ந்தேதி தனது தோட்டத்தில் மதுவில் விஷத்தை கலந்து குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சித்திரைவேல் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News