செய்திகள்

ஆத்தூர் அருகே ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.91 ஆயிரம் பறிமுதல்

Published On 2019-03-18 06:06 GMT   |   Update On 2019-03-18 06:06 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் வாகன தணிக்கையில் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.91 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #ParliamentElection
ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நத்தக்கரை சுங்கச்சாவடி பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

நள்ளிரவு 12.10 மணியளவில் கும்பகோணத்தில் இருந்து பெங்களூருவை நோக்கி சென்ற ஆம்னி பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் அப்துல்லா (வயது 23) என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.91 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரூ.91 ஆயிரத்தை பறிமுதல் செய்து, கெங்கவல்லி உதவி தேர்தல் அலுவலர் முருகையனிடம் ஒப்படைத்தனர். #ParliamentElection

Tags:    

Similar News