செய்திகள்

நாகூர் அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வி‌ஷம் குடித்து கணவர் தற்கொலை

Published On 2019-03-16 10:46 GMT   |   Update On 2019-03-16 10:46 GMT
நாகூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பட்டினம்:

நாகூரை அடுத்த வடக்கு பால் பண்ணை சேரியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 42). தொழிலாளி. இவரது மனைவி பூரணராதா (35). இந்த நிலையில் ராஜ்குமார் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான பூரண ராதா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து ராஜ்குமார் இனி நமக்குள் பிரச்சனை வராது. வா குடும்பம் நடத்தலாம் என்று பூரண ராதாவை அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து உள்ளார்.

இதனால் மனமுடைந்த ராஜ்குமார் வீட்டுக்கு வந்து வி‌ஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News