செய்திகள்

கும்பகோணம் பெண் டாக்டரிடம் ரூ.3½ லட்சம் வரதட்சணை கேட்டு மிரட்டல்

Published On 2019-03-13 10:35 GMT   |   Update On 2019-03-13 10:35 GMT
பெண் டாக்டரிடம் வரதட்சணை கேட்டு கணவர் சித்ரவதை செய்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த உள்ளூர் அனுமந்த் நகரை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் ஓய்வுபெற்ற என்.எல்.சி. அலுவலர். இவரது மகள் வனிதா. இவர் டாக்டருக்கு படித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டில் டாக்டர் வனிதாவுக்கும் , மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ராகுல் பட்டேல் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் திருமண தகவல் மையம் மூலம் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இதற்கிடையே ரூ.3½ லட்சம் வரதட்சணை கேட்டு டாக்டர் வனிதாவை அவர் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த வனிதா, இதுபற்றி கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News