செய்திகள்
காட்பாடியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
காட்பாடியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:
காட்பாடி கிளிதான்பட்டறையில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் இன்று ஈடுபட்டனர். அப்போது அங்கு திரண்ட அப்பகுதி பொதுமக்கள் செல்போன் கோபுரம் எங்கள் பகுதியில் அமைக்க கூடாது என்று போராட்டம் செய்தனர்.
அப்போது எங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சால் பல்வேறு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும். மேலும் கால்நடை மற்றும் பறவையினங்கள் இறக்க கூடும்.எனவே எங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து தனியார் நிறுவன ஊழியர்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews