செய்திகள்

சாத்தான்குளம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

Published On 2019-03-11 10:37 GMT   |   Update On 2019-03-11 10:37 GMT
சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம்:

திசையன்விளையை அடுத்த இட்டமொழி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் முத்துராஜ் (30). இவர் தனது உறவினரான கீழ கருங்கடல் தெற்கு தெருவை சேர்ந்த மந்திரம் (வயது45) என்பவருடன் கடந்த மாதம் 24-ந்தேதி கீழக்கருங்கடலில் இருந்து சாத்தான்குளத்துக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

சாத்தான்குளம் அருகே புளியங்குளம் பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது பைக்கின் பின்னால் இருந்த முத்துராஜ் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முத்துராஜ் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News