செய்திகள்
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மாணவி காயம்
தஞ்சை அருகே நடந்து சென்ற மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள அயோத்திபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகள் காவியா (வயது 15). இவர் அருகே உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கிப்பட்டி- அயோத்திப்பட்டி சாலையில் சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக காவியா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காவியா பலத்த காயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.