செய்திகள்

வேலையை விட்டு நிறுத்தியதால் ஜவுளிக்கடை அதிபரை மிரட்டிய வாலிபர் கைது

Published On 2019-03-09 21:27 IST   |   Update On 2019-03-09 21:27:00 IST
கோவை அருகே வேலையை விட்டு நிறுத்தியதால் எஸ்.எம்.எஸ். அனுப்பி ஜவுளிக்கடை அதிபரை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 45). இவர் ரெடிமேடு ஷோ-ரூம் நடத்தி வருகிறார். இவரது ஷோ-ரூமில் சவுரிபாளையத்தை சேர்ந்த சுஜித்குமார்(33) என்பவர் பணியாற்றி வந்தார். சுஜித் குமார் நடவடிக்கை சரி இல்லாததால் அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்திவேல் வேலையை விட்டு நிறுத்தி விட்டார்.

இந்நிலையில் சக்திவேலின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் மூலம் சுஜித்குமார் தொடர்ந்து மிரட்டல் எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி தொந்தரவு கொடுத்ததோடு, அவதூறான தகவல்களை பரப்பி உள்ளார். இதுகுறித்து சக்திவேல் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சுஜித்குமார் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News