செய்திகள்

கடத்தூர் அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி

Published On 2019-03-09 12:32 GMT   |   Update On 2019-03-09 12:32 GMT
கடத்தூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி மீது ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கடத்தூர்:

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகேயுள்ள புட்டி ரெட்டிப்பட்டி ரெயில் நிலையம் அருகே வசித்து வந்தவர் ஆறுமுகம் (வயது45). தொழிலாளியான இவர் நேற்று காலை அந்த பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் எதிர்பாராத விதமாக ஆறுமுகம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து மொரப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செவிசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஆறுமுகத்திற்கு ரேவதி (40) என்ற மனைவியும், மாதேஷ் (21), பாலசுப்பிரமணியன் (19) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
Tags:    

Similar News