செய்திகள்
இறச்சகுளம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன்
இறச்சகுளம் அருகே பிறந்தநாள் விழாவின் போது 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் மீது போஸ்கோ சட்டப்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நாகர்கோவில்:
குலசேகரம் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் கணவரை பிரிந்து 4 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இவர்களின் குழந்தைக்கு சமீபத்தில் பிறந்த நாள் வந்தது.
இதற்காக குழந்தையை பெண்ணின் கணவர் இறச்சகுளம் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
இறச்சகுளம் பகுதியில் உள்ள கணவரின் உறவினர் வீட்டில் சிறுமியின் பிறந்த நாள் விழா நடந்தது. விழா முடிந்த பின்பு சிறுமியை அவரது தாயாரிடம் கணவர் ஒப்படைத்தார்.
அப்போது சிறுமி, தாயாரிடம், கணவரின் உறவினர் வீட்டில் தனக்கு பாலியல் தொல்லை நடந்ததாக கூறி அழுதார்.
அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இது பற்றி பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதில் பிறந்த நாள் விழாவுக்குச் சென்ற இடத்தில் கணவரின் உறவுக்கார சிறுவன், தனது 4 வயது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்தார்.
13 வயதே ஆன அந்த சிறுவன் மீது பூதப்பாண்டி போலீசார் போஸ்கோ சட்டப்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
குலசேகரம் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் கணவரை பிரிந்து 4 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இவர்களின் குழந்தைக்கு சமீபத்தில் பிறந்த நாள் வந்தது.
இதற்காக குழந்தையை பெண்ணின் கணவர் இறச்சகுளம் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
இறச்சகுளம் பகுதியில் உள்ள கணவரின் உறவினர் வீட்டில் சிறுமியின் பிறந்த நாள் விழா நடந்தது. விழா முடிந்த பின்பு சிறுமியை அவரது தாயாரிடம் கணவர் ஒப்படைத்தார்.
அப்போது சிறுமி, தாயாரிடம், கணவரின் உறவினர் வீட்டில் தனக்கு பாலியல் தொல்லை நடந்ததாக கூறி அழுதார்.
அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இது பற்றி பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதில் பிறந்த நாள் விழாவுக்குச் சென்ற இடத்தில் கணவரின் உறவுக்கார சிறுவன், தனது 4 வயது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்தார்.
13 வயதே ஆன அந்த சிறுவன் மீது பூதப்பாண்டி போலீசார் போஸ்கோ சட்டப்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews