செய்திகள்

தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை - கமல்ஹாசன்

Published On 2019-02-25 09:37 GMT   |   Update On 2019-02-25 09:37 GMT
தேமுதிக மற்றும் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #kamalHaasan
ஆலந்தூர்:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு இன்று முதல் மார்ச் 5-ந்தேதி வரை விருப்ப மனு வழங்கப்படும்.

எங்களுடன் ஒத்த கருத்துடையவர்கள் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், தகுதி உள்ளவர்கள், அவர்களுக்கு தெரிந்த தகுதி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்கலாம்.



விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் ரூ.10 ஆயிரம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். நாங்கள் பரிசீலனை செய்து முடிவு எடுப்போம். தே.மு.தி.க., இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி பேசவில்லை. வேறு சிலபேர் எங்களை தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். நல்லவர்கள் கூட நிற்பார்கள். எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #kamalHaasan
Tags:    

Similar News