செய்திகள்

குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன பஸ் விரைவில் இயக்கம்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தகவல்

Published On 2019-02-23 08:52 GMT   |   Update On 2019-02-23 08:52 GMT
ஏழை மக்கள் செல்லும் வகையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதியுடைய பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ACBus #MRVijayabaskar
கரூர்:

கரூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியதாவது:-

தமிழகத்தில் 2000 மின்சார பஸ்களும்,12,000 காற்று மாசுபடாத அதி நவீன புதிய பஸ்களும் இயக்கப்பட உள்ளது. 3 வருட காலத்திற்குள் இந்த பஸ்கள் இயக்கப்படும். முதல் கட்டமாக 500 மின்சார பஸ்கள் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சியில் விரைவில் இயக்க முதல்வர் சி.40 அமைப்புடன் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

குறைந்த தூரத்தில் ஏழை மக்கள் செல்லும் வகையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதியுடைய பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பொதுவாக குளிர் சாதன பஸ்கள் 2-2 சீட்டுகள் அமைப்பில் உள்ளன. ஆனால் இந்த புதிய குளிர் சாதன பஸ்கள் 3-2 என்ற அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இவை குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட உள்ளது.



முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் 50 குளிர் சாதன பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #ACBus #MRVijayabaskar
Tags:    

Similar News