செய்திகள்
திருவாரூரில் வரதட்சணை கேட்டு கணவர் கொடுமை - மனைவி போலீசில் புகார்
திருவாரூரில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 35), இவரது மனைவி மீனா (28). இவர்களுக்கு 4 வயதில் பெண்குழந்தை உள்ளது. திருவாரூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அறிவழகன் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். திருப்பூருக்கு வேலைக்கு சென்ற அறிவழகன் வீட்டிற்கு வராமலும், பணமும் அனுப்பாமல் இருந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த மீனா இதுகுறித்து திருப்பூரில் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் விசாரித்த போது அறிவழகன் அங்கு திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு வீட்டிற்கு வராமல் இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா இதுகுறித்து அறிவழகனிடம் கேட்ட போது வரதட்சணை வாங்கிவந்தால் மட்டுமே உன்னுடன் குடும்பம் நடத்துவேன் என கூறி அறிவழகன அடித்து துன்புறுத்தினாராம்.
இதுகுறித்து மீனா திருவாரூர் அனைத்துமகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பவள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 35), இவரது மனைவி மீனா (28). இவர்களுக்கு 4 வயதில் பெண்குழந்தை உள்ளது. திருவாரூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அறிவழகன் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். திருப்பூருக்கு வேலைக்கு சென்ற அறிவழகன் வீட்டிற்கு வராமலும், பணமும் அனுப்பாமல் இருந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த மீனா இதுகுறித்து திருப்பூரில் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் விசாரித்த போது அறிவழகன் அங்கு திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு வீட்டிற்கு வராமல் இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா இதுகுறித்து அறிவழகனிடம் கேட்ட போது வரதட்சணை வாங்கிவந்தால் மட்டுமே உன்னுடன் குடும்பம் நடத்துவேன் என கூறி அறிவழகன அடித்து துன்புறுத்தினாராம்.
இதுகுறித்து மீனா திருவாரூர் அனைத்துமகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பவள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews