செய்திகள்

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

Published On 2019-02-21 02:22 GMT   |   Update On 2019-02-21 02:22 GMT
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Katchatheevu #TNFishermen
தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடிப்பது, தாக்கி விரட்டியடிப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.



அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 3 படகுகளையும் சிறைபிடித்து, மீனவர்கள் 13 பேர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Katchatheevu #TNFishermen
Tags:    

Similar News