செய்திகள்

போளூரில் லாரி மோதி பிளஸ் 1 மாணவன் பலி

Published On 2019-02-20 10:32 GMT   |   Update On 2019-02-20 10:32 GMT
போளூரில் இன்று காலை லாரி மோதிய விபத்தில் பிளஸ் 1 மாணவர் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:

போளூர் பத்மாபாய் தெருவை சேர்ந்தவர் மகேஷ், பால் வியாபாரி. இவரது மகன் சுரேந்தர் (16). திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இன்று காலை பைக்கில் டியூசனுக்கு சென்றார். திருவண்ணாமலை மெயின் ரோட்டில் உள்ள பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு மெயின் ரோட்டுக்கு வந்தார்.

அப்போது வேகமாக வந்த மினிலாரி அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுரேந்தர் தலையில் அடிபட்டு இறந்தார்.

போளூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News