search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Polur accident"

    போளூரில் இன்று காலை லாரி மோதிய விபத்தில் பிளஸ் 1 மாணவர் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் பத்மாபாய் தெருவை சேர்ந்தவர் மகேஷ், பால் வியாபாரி. இவரது மகன் சுரேந்தர் (16). திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

    இன்று காலை பைக்கில் டியூசனுக்கு சென்றார். திருவண்ணாமலை மெயின் ரோட்டில் உள்ள பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு மெயின் ரோட்டுக்கு வந்தார்.

    அப்போது வேகமாக வந்த மினிலாரி அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுரேந்தர் தலையில் அடிபட்டு இறந்தார்.

    போளூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர் அருகே பைக் மீது மற்றொரு பைக் மோதிய விபத்தில் பெயிண்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    போளூர்:

    போளூர் அங்காள பரமேஸ்வரி தெருவை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது48) பெயிண்டர். இவர் இன்று காலை அத்திமூர் கிராமத்திற்கு வேலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    போளூர் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்ற போது எதிரே வந்த மற்றொரு பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பிச்சாண்டி பலத்தகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த போளூர் போலீசார் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×