செய்திகள்
சென்னை விமான பயணிகளிடம் செல்போன் திருட்டு- ஊழியர் கைது
சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் செல்போன்களை திருடி வந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு- உள்நாட்டு முனையங்களில் பயணிகளின் உடமைகளை ஏற்றி, இறக்கும் போது அவர்களது செல்போன்கள் அடிக்கடி திருட்டு போய் வந்தது. இது குறித்த புகாரின் பேரில் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் பயணிகளின் உடமைகளை ஏற்றி இறக்கும் தற்காலிக ஊழியரான மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் செல்போன் திருடி வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். மேலும் 20 செல்போன்களை வெளியில் விற்றுவிட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான பயணிகளிடம் செல்போன்களை திருடியதாக 3 தற்காலிக ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு- உள்நாட்டு முனையங்களில் பயணிகளின் உடமைகளை ஏற்றி, இறக்கும் போது அவர்களது செல்போன்கள் அடிக்கடி திருட்டு போய் வந்தது. இது குறித்த புகாரின் பேரில் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் பயணிகளின் உடமைகளை ஏற்றி இறக்கும் தற்காலிக ஊழியரான மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் செல்போன் திருடி வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். மேலும் 20 செல்போன்களை வெளியில் விற்றுவிட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான பயணிகளிடம் செல்போன்களை திருடியதாக 3 தற்காலிக ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.