செய்திகள்

ஆத்தூரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி மதுபாட்டில்களுடன் பெண்கள் மறியல்

Published On 2019-02-13 10:04 GMT   |   Update On 2019-02-13 10:04 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி மதுபாட்டில்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் லீ பஜார் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையை மூடக்கோரி இன்று காலை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் கையில் மதுபாட்டில்களுடன் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த மறியலால் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News