ஊத்துக்கோட்டை அருகே மாடியில் இருந்து விழுந்து காவலாளி பலி
ஊத்துக்கோட்டை:
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே உள்ள புதூர் எல்லப்பநாயுடுபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன் (40).
இவர் ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்தார். இதே கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வரும் திம்மபு பாலபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் புதிதாக வீடு கட்டினார்.
இதன் புதுமனை புகுவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் எல்லப்பனும் அவருடன் பணிபுரியும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
புதிய வீட்டின் மொட்டை மாடியில் அனைவரும் ஜாலியாக ஆடிபாடிக் கொண்டிருந்தனர். அப்போது எல்லப்பன் கால் தவறி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எல்லப்பன் இறந்தார்.
இது குறித்து பென்னாலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் உதயபிரகாஷ் விசாரணை நடத்தி வருகிறார். இறந்த எல்லப்பனுக்கு ரேகா என்ற மனைவியும், முனிகுமார் என்ற மகனும், அக்ஷிதா என்ற மகளும் உள்ளனர்.