செய்திகள்

கிண்டியில் கவர்னர் மாளிகைக்குள் ஏறிக்குதித்த வாலிபர் கைது

Published On 2019-02-08 09:01 GMT   |   Update On 2019-02-08 09:01 GMT
கிண்டியில் கவர்னர் மாளிகைக்குள் ஏறிக்குதித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு உயர் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே செல்ல முடியாது.

இந்த நிலையில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் கவர்னர் மாளிகை காம்பவுண்டு சுவரை ஏறிக் குதித்து புகுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அவர் வந்தவாசியை சேர்ந்த செல்வராஜ் என்பது தெரிந்தது. மேலும் அவர் மது போதையில் இருந்தார்.

செல்வராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News