செய்திகள்

திருமங்கலத்தை தலைமையாக கொண்டு ‘புதிய வருவாய் மாவட்டம்’

Published On 2019-02-08 06:38 GMT   |   Update On 2019-02-08 06:38 GMT
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு, திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய்க்கோட்டம் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே அரசு சேவைகளை வழங்க இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2011-ம் ஆண்டு முதல், 79 புதிய வருவாய் வட்டங்களும், 10 புதிய வருவாய்க் கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 2018-2019ஆம் ஆண்டில் மட்டும், எட்டு வருவாய் வட்டங்களை இந்த அரசு உருவாக்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு, திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய்க்கோட்டம் ஒன்று 2019-2020ஆம் ஆண்டில் உருவாக்கப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
Tags:    

Similar News