செய்திகள்

சேலம் அம்மாப்பேட்டை நர்சிங் மாணவி சாவில் மர்மம் நீடிப்பு

Published On 2019-01-31 13:40 GMT   |   Update On 2019-01-31 13:40 GMT
சேலம் அம்மாப்பேட்டை நர்சிங் மாணவி மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த மாறன் (வயது 53). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 5 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர்.

இவர்களது 4-வது மகள் சங்கவி (16) சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதனால் சாந்தி தனது 2 மகள்களுடன் சேலம் அம்மாப்பேட்டையில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மாணவி சங்கவி மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர் அவரது உடலை சொந்த ஊருக்கு சாந்தி எடுத்து சென்றார். அப்போது உறவினர்களிடம் மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்ததாக கூறினார்.

ஆனால் அதனை நம்பாத சாந்தியின் கணவரின் உறவினர்கள் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அம்மாப்பேட்ட போலீசார் தற்கொலை வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் மாணவியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையில் முடிவில் அவரை கொன்று தூக்கில் தொங்க விட்டனரா? அல்லது அவரே தூக்கில் தொங்கினாரா? என்பது தெரியவரும் என்றும் ஏற்கனவே 2 முறை மாணவி தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே சாந்தியின் கணவரின் உறவினர்கள் சாந்தி மகளை கொன்று விட்டு நாடகமாடுகிறார் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் இந்த வழக்கில் மேலும் பரபரப்பு நீடித்து வருகிறது.

Tags:    

Similar News