செய்திகள்

மணல் கடத்திய லாரி பறிமுதல்- டிரைவர் தப்பி ஓட்டம்

Published On 2019-01-25 13:38 GMT   |   Update On 2019-01-25 13:38 GMT
மத்தூரை பகுதிகளில் மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை பகுதிகளில் லாரியில் மணல் கடத்துவதாக ஊத்தங்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் தென்பெண்ணையாறு கரையோரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மர்ம நபர்கள் ஒரு டாராஸ் லாரியில் மணலை அள்ளி கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்ட மர்ம நபர்களும், லாரியின் டிரைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரித்ததில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மத்தூரை அடுத்த கருங்கல் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான லாரி என்பது தெரியவந்தது. இதையடுத்து சங்கர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News