செய்திகள்

கஜா புயல் நிவாரண நிதி கேட்டு கந்தர்வக்கோட்டையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

Published On 2019-01-24 13:00 GMT   |   Update On 2019-01-24 13:00 GMT
கந்தவர்கோட்டை அருகே கஜா புயல் நிவாரண நிதி கேட்டு பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கந்தர்வக்கோட்டை:

கந்தவர்கோட்டை அடுத்து உள்ள வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டி உள்ளிட்ட பல பகுதிகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. இவர்களுக்கு அரசின் புயல் நிவாரணநிதி முறையாக கிடைக்கவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த வேம்பன்பட்டி, சிவந்தான்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை கந்தர்வகோட்டை- பட்டுக்கோட்டை சாலையில் கந்தர்வக்கோட்டை அடுத்த வேம்பன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலை  மரக்கட்டைகளை போட்டு  மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இது குறித்து தகவல்  அறிந்ததும் கந்தவர்கோட்டை போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை  நடத்தினர். ஆனால் பொதுமக்கள் வருவாய் துறை அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினால் தான் கலைந்து செல்வோம் என்று கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து சாலை மறியல் செய்து வருவதால் அங்கு கடுமையாக போக்குவரத்து பாதிக்கபட்டது. இதனால் பஸ் பயணிகள் அவதி அடைந்தனர். 
Tags:    

Similar News