செய்திகள்

காயல்பட்டிணத்தில் 2 மீனவர்கள் மாயம்

Published On 2019-01-23 16:14 GMT   |   Update On 2019-01-23 16:14 GMT
காயல்பட்டிணத்தில் 2 மீனவர்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆறுமுகநேரி:

காயல்பட்டிணம் சிங்கித்துறை வடக்குகாலனியை சேர்ந்தவர் சகாயதேவன். இவரது மகன் ஹாலன்ராய் (வயது 16). இவன் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தந்தையுடன் மீன் தொழில் செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ் மகன் ஆகாஷ் (18). மீனவர். 

நண்பர்கள் இருவரும் சம்பவத்தன்று கடற்கரைக்கு சென்று வருவதாக கூறி சென்றனர். ஆனால் அவர்கள் திரும்பிவரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர்கள் நண்பர், உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர்களை பற்றி எந்த தகவலும் இல்லை. 

இது குறித்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் எங்கு சென்றார்கள்? அவர்களை யாரும் கடத்தி சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News