செய்திகள்

வல்லம்புதூரில் பிளஸ்-2 மாணவி தற்கொலை

Published On 2019-01-22 11:52 GMT   |   Update On 2019-01-22 11:52 GMT
தஞ்சை மாவட்டம் வல்லம்புதூரில் வயிற்று வலி காரணமாக பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:

தஞ்சை மாவட்டம் வல்லம்புதூர் கலைஞர் காலனியை சேர்ந்த சண்முகநாதன் மகள் திவ்யா (வயது 17). இவர் வல்லத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த திவ்யா நேற்று இரவு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் திவ்யா பரிதாபமாக இறந்தார்.

இது பற்றிய புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News