செய்திகள்

காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தியுடன் பேச சக்தி செயலி அறிமுகம்

Published On 2019-01-21 10:05 GMT   |   Update On 2019-01-21 10:57 GMT
காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தியுடன் பேசுவதற்கு சக்தி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தமிழக தொண்டர்கள் பேசுவதற்கு 8828843022 என்ற மொபைல் எண் கொடுக்கப்பட்டுள்ளது. #ShaktiApp
சென்னை:

காங்கிரஸ் தொண்டர்களுடன் பேசவும், அவர்களின் கருத்துக்களை அறியவும், ‘சக்தி’ என்ற செயலியை ராகுல்காந்தி அறிமுகப்படுத்தி உள்ளார்.

இந்த செயலி ஒவ்வொரு மாநிலத்திலும் தொடங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் இதன் அறிமுகம் மற்றும் தொடக்க விழா தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று நடந்தது. அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனித்தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது.

மாவட்ட வாரியாக தொண்டர்கள் இந்த செயலியில் இணைந்தனர். தமிழ்நாட்டிற்காக 8828843022 என்ற மொபைல் எண் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் சேர விரும்புகிறவர்கள் தங்கள் செல்போனில் இருந்து இந்த எண்ணுக்கு தங்களது வாக்காளர் அடையாள எண்ணை குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ் . அனுப்ப வேண்டும்.

அடுத்த வினாடியே நீங்கள் சக்தி திட்டத்தில் வெற்றிகரமாக பதிவு செய்து கொண்டீர்கள் என்ற பதில் வரும்.

இவ்வாறு இணைபவர்களின் பெயர் பட்டியலை நாடு முழுவதும் ஒருங்கிணைத்து டெல்லியில் இருந்து அந்த எண்களுக்கு கட்சியின் கருத்துக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படும்.

தொண்டர்களும் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அவ்வப்போது தெரிவிக்கலாம். ராகுல்காந்தி அந்த தகவல்களை பார்ப்பதோடு எந்த தொண்டரையும் நேரடியாக தொடர்பு கொண்டு பேச முடியும்.

இதன்மூலம் தொண்டர்களுக்கும், கட்சி தலைவர் ராகுல்காந்திக்கும் இடையே நேரடி தொடர்பு ஏற்படும். இதன்மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சி நிலவரம், கட்சிக்குள் நிலவும் பிரச்சனைகள், தொண்டர்களின் மனநிலை ஆகியவற்றை நேரடியாக அறிந்து அதற்கேற்ப கட்சி நடவடிக்கை மேற்கொள்ளும்.


புதிய திட்ட தொடக்க விழாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் தொடங்கி வைத்தார்.

விழாவில் சஞ்சய்தத், ஸ்ரீவல்லபிரசாத், பிரவீண் சக்கரவர்த்தி, சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.செல்வம், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், இளங்கோவன், தங்கபாலு, நடிகை குஷ்பு, காங்கிரஸ் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி.க்கள் சுதர்சன நாச்சியப்பன், ஆரூண், அழகிரி, பீட்டர் அல்போன்ஸ், விசுவநாதன், ராணி,

எம்.எல்.ஏ.க்கள் வசந்த குமார், ராஜேஷ்குமார், விஜயதாரணி, பிரின்ஸ் மற்றும் நிர்வாகிகள் தாமோதரன், சிரஞ்சீவி, ஜான்சிராணி, டாக்டர் செல்லகுமார், கோபண்ணா, நவீன், செல்வபெருந்தகை, அஸ்லாம்பாஷா, பிரின்ஸ் தேவசகாயம், சொர்ணா சேதுராமன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர், ரூபி மனோகரன் மற்றும் தமிழ்செல்வன், அருள் பெத்தையா, தாஸ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். #Congress #RahulGandhi #ShaktiApp
Tags:    

Similar News