செய்திகள்

கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக செயல்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு

Published On 2019-01-18 15:05 GMT   |   Update On 2019-01-18 15:05 GMT
காட்டுப்பாக்கத்தில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக செயல்படுகிறது என குற்றம்சாட்டினார். #KodanadEstate #KodanadVideo #EdappadiPalanisamy
சென்னை:

சென்னை காட்டுப்பாக்கத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

பல தலைவர்களுக்கு மத்தியில் வித்தியாசமாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மக்களுக்கு கொடுத்து கொடுத்து அவர்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர்.

காலத்தால் அழிக்க முடியாத திட்டங்களைக் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் 51 லட்சம் குழந்தைகள் சத்துணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கொடநாடு தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. கொடநாடு சம்பவம் கூலிப்படையால் செய்யப்பட்டது. கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் தி.மு.க. உள்ளது. சயான், மனோஜை ஜாமீனில் எடுத்தது தி.மு.க. தான். 

தெகல்கா முன்னாள் ஆசிரியரின் பேட்டி தி.மு.க.வால் செய்யப்பட்ட நாடகம். வாலையாறு பகுதியை சேர்ந்த மனோஜ் மீது கேரளாவில் கொலை வழக்கு உள்ளது. கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

கொடநாடு விவகாரத்தில் திட்டமிட்டு தி.மு.க. நடத்தும் நாடகத்தை சட்டப்படி தவிடுபொடியாக்கி காட்டுவேன். ரூ.1000 பொங்கல் பரிசு கொடுத்ததால் பொறுக்க முடியாமல் பொய் வழக்குகளை ஜோடிக்கின்றனர்.

நான் எதற்கும் அஞ்சமாட்டேன், இறுதி சொட்டு ரத்தம் உள்ளவரை அ.தி.மு.க.விற்கு விசுவாசமாக இருப்பேன் என தெரிவித்தார். #KodanadEstate #KodanadVideo #EdappadiPalanisamy
Tags:    

Similar News