செய்திகள்

அம்பை அருகே பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது

Published On 2019-01-17 12:31 GMT   |   Update On 2019-01-17 12:31 GMT
அம்பை அருகே மாடு மேய்க்கும் தகராறில் பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
நெல்லை:

அம்பை அருகே உள்ள வேலாயுதம் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சங்கரம்மாள் (வயது43). இவர் தினசரி வயல்காட்டிற்கு சென்று மாடுகளை மேய்த்து வந்தார். இவரது மாடுகளை அந்த பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (55) என்பவர் வளர்த்து வந்த மாடுகள் முட்டியது. 

இதனால் சங்கரம்மாள் ராமலிங்கத்தை வேறு இடத்தில் மாடு மேய்க்கும்படி கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ராமலிங்கம் உருட்டு கட்டையால் சரமாரி சங்கரம்மாளை அடித்து தாக்கினார். இதில் சங்கரம்மாள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இது குறித்து அம்பை போலீசார் பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்தனர்.
Tags:    

Similar News