செய்திகள்
வாலாஜா அருகே சுவரை இடித்து வீட்டுக்குள் லாரி புகுந்தது- தொழிலாளி பலி
வாலாஜா அருகே மணல் லாரி கட்டுப்பாட்டை இழந்து வீட்டு சுவரை இடித்து தள்ளி கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
வாலாஜா:
வாலாஜா அருகே உள்ள எடகுப்பம் வள்ளுவம்பாக்கம் ரோட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 37). கூலிதொழிலாளி. இவர் நேற்றிரவு வீட்டின் வாசலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவு அவரது வீட்டின் வழியாக சென்ற மணல் லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ராதாகிருஷ்ணன் வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளி கவிழ்ந்தது. அப்போது காம்பவுண்ட்சுவர் இடிந்து படுத்திருந்த ராதாகிருஷ்ணன் மீது விழுந்தது. இதில் அவர் பலத்தகாயமடைந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு ராதாகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.