செய்திகள்

பொங்கல் பரிசு ரூ.1000 வாங்கி மது குடித்த தொழிலாளி - தட்டிக் கேட்ட மனைவிக்கு அடி

Published On 2019-01-10 09:59 GMT   |   Update On 2019-01-10 09:59 GMT
ராஜபாளையத்தில் பொங்கல் பரிசு ரூ.1000 வாங்கி கணவர் மது குடித்ததால், மனைவி வாக்குவாதம் செய்தார். இதனால் அவரை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் சுந்தர ராஜபுரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 35) தொழிலாளி. இவர் அடிக்கடி மது அருந்தி வந்தார்.

இதனால் குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பதில்லை. இந்த நிலையில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கிய ரூ.1,000-த்தை மனைவிக்கு தெரியாமல் வாங்கி, வடிவேல் மது குடித்துள்ளார்.

இது தெரியவந்ததும் மனைவி பேச்சியம்மாள் கணவரை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த வடிவேல் மனைவியை சரமாரியாக தாக்கினார். இது குறித்து சேத்தூர் புறக்காவல் போலீசில் புகார் செய்யப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து மனைவியை தாக்கிய வடிவேலுவை கைது செய்தார். #tamilnews
Tags:    

Similar News