செய்திகள்

வர்த்தக நிறுவனங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2019-01-07 11:50 GMT   |   Update On 2019-01-07 11:50 GMT
தங்கச்சிமடம் பகுதியில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராமேசுவரம்:

தமிழக அரசு ஜனவரி 1-ந் தேதி முதல் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.

அதன்பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உணவுக்கடைகள், மளிகைக் கடைகள், தேனீர் கடைகள் உள்பட வர்த்தக நிறுவனங்களில் பாலிதீன் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார்.

ராமேசுவரம் தாலுகா தங்கச்சிமடம் ஊராட்சி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட சிறு கடைகள் முதல் உணவு கடைகள் என பெரிய வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

இந்த பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா தலைமையில் அதிகாரிகள் சோதணை நடத்தினர். அப்போது 66 கடைகளில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன்னுக்கும் மேலான ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினர். மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுத்து அபராத தொகை வசூல் செய்யப்படும் என்றும் எச்சரித்தனர்.

இந்த சோதனையில் ராமேசுவரம் வட்டாட்சியர் சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜீவா, செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் கதிரேசன் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர். #tamilnews
Tags:    

Similar News