செய்திகள்

சாத்தான்குளம், கூடங்குளம் பகுதியில் கல்லூரி மாணவி- இளம்பெண் மாயம்

Published On 2019-01-05 16:17 GMT   |   Update On 2019-01-05 16:17 GMT
சாத்தான்குளம் மற்றும் கூடங்குளம் பகுதியில் கல்லூரி மாணவி, இளம்பெண் மாயமானார்கள். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள கடகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா மிக்கேல். இவரது மகள் ஜெனித் ஜெல்சியா (வயது 19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜெனித் ஜெல்சியா கடந்த 3-ந் தேதி கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் மாலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. கல்லூரிக்கும் செல்லவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. 

 இது குறித்து அவரது தந்தை ராஜா மிக்கேல் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து மாணவி ஜெனித் ஜெல்சியா எங்கு சென்றார்? அவரை யாரேனும் கடத்தி சென்றனரா என விசாரணை நடத்தி வருகிறார்.

கூடங்குளம் அருகே உள்ள ஆவுடையார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவி பாலா (வயது33). இவர்களுக்கு அருண் (6) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

இதில் மனம் உடைந்த பாலா தனது மகன் அருணை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் உறவினர் வீடுகளுக்கும் செல்லவில்லை. எங்கு சென்றார் என்று கண்டு பிடிக்க முடியாததால், அர்ஜுனன், கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். 
Tags:    

Similar News