செய்திகள்

குமரி மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2019-01-04 13:19 GMT   |   Update On 2019-01-04 13:19 GMT
குமரி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

நாகர்கோவில்:

ராஜாக்கமங்கலத்தை அடுத்த கணபதிபுரம் தெற்கூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 23). இவர் மீது சுசீந்திரம், கருங்கல் போலீஸ் நிலையங்கள் திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் வெள்ளி சந்தை போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் ஜெயிலில் இருக்கும் அரவிந்த் கடந்த நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

அதன்பின்பு அவர் சுசீந்திரம் பகுதியில் வின்சென்ட் என்பவரை மிரட்டி பணம் பறித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

எனவே அவரை குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதனை கலெக்டர் ஏற்றுக்கொண்டு, தற்போது ஜெயிலில் இருக்கும் அரவிந்தை குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நாகர்கோவில் ஜெயிலில் இருந்த அரவிந்த் பாளை. ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News