செய்திகள்

திருமங்கலம் அருகே வாகனம் மோதி குழந்தை பலி

Published On 2019-01-02 11:53 GMT   |   Update On 2019-01-02 11:53 GMT
திருமங்கலம் அருகே இன்று காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தது.

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் இரண்டாவது பெண் குழந்தை பவித்தகுரு (1½ வயது).

இன்று காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது அம்மாபட்டியை சேர்ந்த பாபு மகன் ஆனந்த்பாபு (32) இந்தப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விற்பனை செய்வதற்காக வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது வாகனம் ஏறியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. தண்ணீர் வண்டி ஏறி ஒன்றரை வயது பெண் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News