செய்திகள்
பாலக்காடு அருகே விபத்தில் கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
பாலக்காடு அருகே விபத்தில் கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்காடு:
கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் காதர் அமீன். இவரது மகன் அர்ஷத் (19). குனியமுத்தூர் குறிஞ்சி நகர் மொய்தீன் மகன் ரியாஸ் (18).
இவர்கள் இருவரும் கோவை - பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்துந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் பாலக்காடு புது நகரத்தில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றனர்.
அதிகாலை அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கோவை திரும்பினார்கள். தத்த மங்கலம் அருகே வந்த போது வண்ணா மடையில் இருந்து ஆலப்புழாவுக்கு ஒரு வேன் சென்றது.
இந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் காயம் அடைந்தனர். அர்ஷத் சித்தூர் தாலுகா மருத்துவ மனையிலும்,ரியாஸ் பாலக்காடு அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலன் இன்றி இருவரும் இறந்தனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசராணை நடத்தி வருகிறார்கள்.