செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
தேன்கனிக்கோட்டை அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், கிஷான்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 23), அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சதீஸ் (18) ஆகிய 2 பேர் தளி அருகேயுள்ள தனியார் கார்மென்ட்ஸ் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தனர். நேற்றிவு பணியை முடித்து விட்டு இன்று காலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது தேன்கனிக் கோட்டை அண்ணாநகர் கூட்டு ரோடு அருகேயுள்ள தனியார் சினிமா தியேட்டர் அருகே நின்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சதீசை மீட்டு அக்கம் பக்கத்தினர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.