செய்திகள்

வேதாரண்யம் வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

Published On 2018-12-31 09:37 GMT   |   Update On 2018-12-31 09:37 GMT
வேதாரண்யம் வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வாலிபரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரான்புலம் 2-ம் சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 39). இவர் நேற்று இரவு ஆயக்காரங்குடி வனப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தார்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட கோடியக்கரை வனவர் சதிஷ்குமார் மற்றும் வனத்துறையினர் ராஜாவை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அனுமதியின்றி வனப்பகுதியில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது.

இதையடுத்து நாகை வனஉயிரின பாதுகாப்பாளர் சத்திஷ் கிரிஜலா உத்தரவின்பேரில் ராஜாவை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News