செய்திகள்

திருவண்ணாமலையில் வாலிபர் எரித்துக் கொலை

Published On 2018-12-30 17:27 GMT   |   Update On 2018-12-30 17:27 GMT
திருவண்ணாமலையில் எரிந்த நிலையில் கிடந்த வாலிபர் பிணத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை வேங்கிகால் நகரில் உள்ள டாஸ்மாக் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் எரிந்த நிலையில் கிடந்தது.  இன்று காலை அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் பிணத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி. அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பிணத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும். அவரை கொலை செய்து விட்டு எரித்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News