செய்திகள்

கீழக்கரையில் வீட்டில் தீ விபத்து - முதியவர் கருகி பலி

Published On 2018-12-29 11:41 GMT   |   Update On 2018-12-29 11:41 GMT
கீழக்கரையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகிய முதியவர் பரிதாபமாக இறந்தார்.

கீழக்கரை:

கீழக்கரை அண்ணா நகரில் வசிப்பவர் மூக்கன் (வயது 75). இவரது மகன் அந்தப்பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதனை முன்னிட்டு கட்டுமானப் பொருட்கள் வைப்பதற்காக அங்கு குடிசை வீடு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அந்த வீட்டில் மூக்கன் படுத்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு குடிசையில் தீப்பிடித்தது.

இந்த விபத்தில் குடிசையில் இருந்த மூக்கன், உடல் கருகி பரிதாபமாக இறந்தார். கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News