செய்திகள்

பல்லடம் அருகே எந்திரத்தில் சிக்கி பனியன் தொழிலாளி பலி

Published On 2018-12-28 13:03 GMT   |   Update On 2018-12-28 13:03 GMT
பல்லடம் அருகே பனியன் கம்பெனியில் வேலை பார்த்த தொழிலாளி எந்திரத்தில் சிக்கி பலியானார்.

பல்லடம்:

பல்லடம் மகாலட்சுமி நகர் 6-வது வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 45). இவர் பல்லடம்- திருப்பூர் இடையே உள்ள குன்னாங்கல்பாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் எந்திர ஆபரேட்டராக இருந்தார். நேற்று மாலை வேலை செய்தபோது எந்திரத்தில் சிக்கினார். 

காயம் அடைந்து மயங்கி விழுந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். 

இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News