செய்திகள்

கோவையில் வாலிபர் அடித்துக் கொலை

Published On 2018-12-28 12:10 GMT   |   Update On 2018-12-28 12:10 GMT
கோவையில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்காநல்லூர்:

கோவை சிங்காநல்லூர் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 33). லேத் பட்டறை தொழிலாளி.

இவர் இன்று காலை ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் கீழ்புறம், பட்டணம் ரோடு பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

தகவல் அறிந்து மாநகர கிழக்கு சரக உதவி கமி‌ஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரத்தினசாமி உடல் அருகே விறகு கட்டைகள் கிடந்தன. மர்மநபர்கள் அவரை கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

ரத்தினசாமிக்கு சுமா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கொலை குறித்து தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். ரத்தினசாமி உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

ரத்தினசாமியை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது? அவருக்கு யாருடனாவது முன் விரோதம் இருந்ததா? என போலீசார் விசாரித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News